வீடு, வாணிபம், தொழில் வளர்க்கும் வாஸ்து சாஸ்திரம்

ஆசிரியர்: ஆர்.முத்துக்குமார் எம்.பி.ஆர்.எம். இராமசுவாமி

Category வாஸ்து
Publication ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்
FormatPaper Back
Pages 296
Weight300 grams
₹170.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்நூலைப் பற்றி... வீடு, மனை கட்டும்போது வாஸ்து சாஸ்திர அடிப்படையில்தான் கட்டவேண்டும் என்பதை இப்போது அனைவருமே அறிந்து கொண்டு விட்டனர். வளம் பெருக்கும் வாஸ்து சாஸ்திரம் எனும், எமது முந்தைய நூல் வாஸ்து சாஸ்திரம் பற்றி தமிழ் மக்களிடையே மிகுந்த விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணிவிட்டது என்றால் மிகையாகாது. வாணிபம், தொழில் செய்பவர்க்கு இந்த வாஸ்து சாஸ்திரம் தேவையில்லையா? தேவை. தேவை, முற்றிலும் தேவை. லட்சக்கணக்கில் முதலீடு செய்து வியாபாரம் செய்தவர்களில், கோடிக்கணக்கில் கொட்டி தொழில் செய்தவர்களில் அங்கே இங்கே கடன் வாங்கி கடை ஆரம்பித்தவர்களில் எத்துணை பேர் போண்டி ஆகிவிட்டார்கள் தெரியுமா? பாவம் அவர்கள். வாஸ்து சாஸ்திரத்தை அனுசரித்து தொழிலை, வியா பாரத்தை, கடையை ஆரம்பித்திருந்தால் அவர்களுக்கு அந்த நிலை ஏற்பட்டிருக்காது. வாணிபம், தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாஸ்து எவ்வாறு பயன்படுகிறது, வாஸ்துவை அனுசரித்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை யெல்லாம் தெளிவாக இந்நூல் சொல்லித் தருகிறது. வாணிபம், தொழில், வியாபாரத்தை எந்த இடத்தில், எந்த திசையில் அமைக்க வேண்டும், எந்தெந்தத் தொழிலுக்கு என்னென்ன திசை ஏற்றது, முக்கியஸ்தர்கள், மேலாளர்கள், காசாளர்கள், தொழிலாளர்கள், சிப்பந்திகள் எந்த திசை நோக்கி யிருந்து செயல்பட வேண்டும், அவர்களுக்கான அறைகள் எங்கெங்கே அமைக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் இந்நூல் விரிவாகச் சொல்கிறது. பிளாட் ஹவுஸ்கள் கட்டுபவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் ஏராளமான ஆலோசனைகள் சொல்லப்பட்டுள்ளன. கண்ணை மூடிக் கொண்டு Flat வீடுகளை வாங்கி கஷ்டப்பட வேண்டாம். இதில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள், இன்பமாக வாழுங்கள். மற்றபடி தொகுதி வீடுகள், கூம்பு, கோபுர அமைப்பு வீடுகள் பல முகக் கட்டடங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், மருத்துவ மனைகள், தொழில் சாலைகள், அடுக்கு மாடிக் கட்டடங்கள் போன்ற பல பெரிய பெரிய நிறுவனங்களை வாஸ்து சாஸ்திர அடிப்படையில் எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் இந்நூலுள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் வீட்டமைப்பு பற்றி முந்தைய எமது வளம் பெருக்கும் வாஸ்து சாஸ்திரம்' நூலில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களிலும் மேம்பட்ட விஷயங்கள் ஏராளமாகச் சொல்லப்பட் டுள்ளன. உங்கள் வாழ்வில் வசந்தம் பரவ, வளம் கொழிக்க வேண்டுமா? அதற்கு வாஸ்து புருஷன் கைகொடுப்பார். அவரை வழிபடும் முறையும் கூட கூறப்பட்டுள்ளது. அப்புறம் என்ன ஸ்வாமி! புத்தகத்தை வாங்க வேண்டியதுதானே? வாங்குங்கள் ஒரு புத்தகத்தை. வாழுங்கள் வளமோடு புத்தகத்தை கையில் எடுத்ததுமே ஒரு மாற்றத்தை நிச்சயம் உணர்வீர்கள், பாருங்களேன். சிறிய வீடானாலும் குடிசையானாலும் சாஸ்திரத்தை அனுசரியுங்கள்; சகலமும் பெறுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.முத்துக்குமார் :

வாஸ்து :

ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் :