மூலிகை சாகுபடி - தொகுதி 2

ஆசிரியர்: கோ.பாலகிருஷ்ணமூர்த்தி

Category விவசாயம்
Publication நவீன வேளாண்மை
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹30.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சீனாவில் "எபிட்ரா" என்ற மருத்துவச் செடி 9000 ஆண்டுகளுக்கு முன்பே மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேலும் நம் நாட்டில் சர்பகந்தா என்ற மூலிகை சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே நாட்டு மருந்தாகவும், ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதற்கான சான்றுகள் உள்ளன. மேலும் ஆயுர்வேத மருத்துவ முறையில் கி.மு.600ல் மருந்துகளின் குணங்கள், அவை தீர்க்கும் நோய்களைப் பற்றியும் குறிப்பிட்டு உள்ளனர். இதில் சுமார் 341 மருந்துச் செடிகள், அவற்றிலிருந்து மருந்துகள் தயாரித்தல் மற்றும் அவற்றின் நோய் தீர்க்கும் குணங்களைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. இது பாரம்பரியமாக இன்று வரை பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.கடந்த நூற்றாண்டின் நாகரிக வளர்ச்சியால் காடுகள் அழிக்கப்பட்டு எண்ணற்ற மூலிகைச் செடிகள் அழிந்து விட்டன. மேலும் பல மூலிகைச் செடிகள் விரைவில் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
விவசாயம் :

நவீன வேளாண்மை :