முருகவேள் பன்னிரு திருமுறை அருணகிரிநாதர் அருளிய திருவகுப்பு மூலமும் உரையும்

ஆசிரியர்: புலவர் பி.ரா.நடராசன்

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper back
Pages 174
Weight200 grams
₹100.00 ₹97.00    You Save ₹3
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழ்மொழியை மேநாட்டார் பக்தியின் மொழி என அடையாளம் காட்டினர். இலக்கிய உலகில் புதிய இலக்கிய வகை களையும், நடைகளையும் உத்திகளையும் சந்தச் சிறப்புகளையும் அமைதி காணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வையும் பக்தி இலக்கியங்கள் படைத்துக்காட்டின. அந்த வகையில் அமைந்த பக்தி இலக்கியங்கள் தேவாரம் உள்ளிட்ட சைவத் திருமுறைகள் என்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றும் திருமுருகன் அருள் நூல்கள் என்றும் வழங்கப்படுகின்றன. திருமுருகனாகிய தமிழ்க் கடவுளைப் பற்றிய அருள் நூல்களைத் தொகுத்து முருகவேள் பன்னிருதிருமுறைகளாக வெளியிட்டனர். அத்தொகுப்பினுள் அருணகிரிநாதரின் அனைத்து நூல்களும் இடம் பெற்றுள்ளன. திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரந்தாதி போற்றப்படும் அளவுக்கு ஏனைய நூல்கள் பேசப்படுவதில்லை. அந்நிலையில் தற்பொழுது கந்தரலங்காரம், திருவகுப்பு போன்றவை இப்பொழுதுதான் பிரபல மாவதைக் காண்கிறோம். அவற்றுள் அருணகிரிநாதரின் திருவகுப்பு மட்டும் இப்பொழுது மூலமும் உரையுமாக வெளிவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர் பி.ரா.நடராசன் :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :