மாயம்

ஆசிரியர்: பெருமாள் முருகன்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 176
ISBN978-93-90224-88-3
Weight200 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




பெருமாள்முருகன் 2020இல் எழுதிய இருபது சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் உள்ள கதைகள் முழுக்கவும் பதின் பருவத்தினர் பற்றியவை. வெவ்வேறு களங்கள்; தொழிற்சூழல்கள். எனினும் அவர்கள் கொள்ளும் மன உணர்வுகள் ஒருமை கொண்டுள்ளன. சமகால விளிம்பு நிலை வாழ்வை வெகு இயல்போடு காட்சிப்படுத்தியிருக்கும் இவை நல்ல வாசிப்பு அனுபவத்தை வழங்குபவை.
இத்தொகுப்பில் மூன்று கதைகள் தவிர்த்துப் பிற கதைகள் அனைத்தும் இதுவரை பிரசுரம் பெறாதவை.
ஆவேசத்தைக் காப்பாற்றிக்கொண்டு எறும்புவரிசை போல இருபது கதைகள் எழுதிவிட்டேன். ஓன்றின் காலை ஒன்று பற்றிக்கொண்டும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்துகொண்டும் இவை செல்கின்றன. இரண்டு மூன்று சேர்ந்து பெருமூட்டை சுமக்கின்றன. வளைந்தும் நெளிந்தும் கலைந்தும் கூடியும் எதையோ தேடி வரிசை போய்க்கொண்டே இருக்கிறது. ஆம். இவற்றை எறும்பு வரிசைக் கதைகள் என அடையாளப்படுத்தலாம்.

பெருமாள்முருகன்

உங்கள் கருத்துக்களை பகிர :
பெருமாள் முருகன் :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :