புத்தரும் அவர் தம்மமும்
ஆசிரியர்:
டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர்
தமிழில் : பெரியார்தாசன்
விலை ரூ.500
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1919-0429-9908-2554
{1919-0429-9908-2554 [{புத்தகம் பற்றி இந்திய மக்களின் சில பிரிவினரிடம் பவுத்தத்தின்பால் ஏற்பட்டுள்ள அக்கறையின் அளவு வளர்ச்சியுற்று வருவதற்கான
<br/>அடையாளங்கள் அறியும்படியாக உள்ளன. அதனோடு இயல் பாகவே புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் பற்றிய
<br/>தெளிவான முரணற்ற விபரங்களுக்கான தேவையும் வளர்ந்து வந்துள்ளது.
<br/>
<br/>பவுத்தரல்லாத யாருக்கும் புத்தரின் வாழ்க்கையையும் போதனைகளையும் தெளிவுற முரணல்லாத வகையில் முழுமையாய்
<br/>எடுத்துரைப்பது மிகவும் கடினமான பணியாகவே உள்ளது. நிகாயங்களை அடிப்படையாகக் கொண்டு புத்தரின் வாழ்க்கையை
<br/>முரணின்றி வெளிப்படுத்துவது மட்டுமின்றி அவருடைய போதனை களின் சில பகுதிகளை வெளிப்படுத்துவதும் மிகக் கடினமான
<br/>பணியாகி விடுகிறது. உண்மையில் உலகிலுள்ள சமயங்களை நிறுவியவர்கள் அனைவரிலும், பவுத்தம் நிறுவியவரின் வாழ்க்கை
<br/>யையும் போதனைகளையும் வெளிப்படுத்துவது ஏற்படுத்தும் பிரச்சினைகள் குதர்க்கமாக இல்லையெனினும், முற்றிலும் குழப்ப
<br/>மானதாக உள்ளது என்று கூறுவது மிகையாகாது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதும் பவுத்தத்தைப் புரிந்து கொள்ளும்
<br/>பாதையைத் தெளிவுபடுத்திக் கொள்வதும் அவசியமில்லையா? பவுத்தர்களாயிருப்பவர்கள் இந்தப் பிரச்சினைகளை பொது
<br/>விவாதத்திற்கேனும் எடுத்துக் கொண்டு இப்பிரச்சினைகளின் மீது என்ன தெளிவைப் பெற முடியுமென்று யோசிக்க வேண்டிய
<br/>தருணமல்லவா இது?
<br/>
<br/>இந்தப் பிரச்சினைகள் குறித்த விவாதத்தை எழுப்பும் நோக்கத்தில் இவற்றை நான் இங்கு முறைப்படுத்துகிறேன். முதல் பிரச்சினை
<br/>புத்தரின் வாழ்க்கையின் மிக முக்கிய சம்பவமான பரிவ்ராஜம் பற்றியதாகும். புத்தர் ஏன் பரிவ்ராஜத்தை மேற்கொண்டார்? மரபு
<br/>ரீதியாக அளிக்கப்படும் பதிலின்படி அவர் பரிவ்ராஜம் (துறவு) ஏற்றது ஏனென்றால், அவர் ஒர் இறந்த மனிதனையும், நோயாளியையும்,
<br/>முதுமையுற்றவரையும் பார்த்ததால்தான் என்பது. இந்த பதில் எடுத்த எடுப்பிலேயே அபத்தமானதாக உள்ளது. புத்தர் பரிவ்ராஜம் ஏற்றுக்
<br/>கொண்டது 29 - வது வயதில். இந்த மூன்று காட்சிகளின் விளைவாக அவர் பரிவ்ராஜம் ஏற்றாரென்றால், இதற்கு முன் இந்தக் காட்சிகளை
<br/>அவர் காணவில்லை என்பது எப்படிப் பொருந்தும்? இவைகள் நூற்றுக்கணக்கில் பொதுவாய் நிகழும் காட்சிகள். இவற்றை இதற்கு
<br/>முன் புத்தர் காணாதிருக்கவே முடியாது. முதல் முறையாக அப்போது தான் இவற்றை புத்தர் கண்டார் என்று கூறும் மரபு ரீதியான
<br/>விளக்கத்தை ஒப்புக்கொள்ளவே இயலாது; இந்த விளக்கம் ஏற்புடைய தன்று - அறிவுக்குப் பொருந்துவதன்று. ஆனால் இது இவ்வினாவிற்கு
<br/>உண்மையான விடையல்ல என்றால், உண்மையான விடை யாது?
<br/>
<br/>இரண்டாவது பிரச்சினை நான்கு ஆரிய உண்மைகளால் உண்டாக்கப் படுவதாகும். அவைகள் புத்தரின் உண்மையான
<br/>போதனைகளின் பகுதிகளாக அமைந்துள்ளனவா? இந்த சமய மரபு முறை பவுத்தத்தின் ஆணி வேரையே அறுத்தெறிவதாக உள்ளது.
<br/>வாழ்க்கை துக்கமாயின், மரணம் துக்கமாயின், மறு பிறப்பும் துக்கமாயின், பிறகு அனைத்திற்கும் ஒரு முடிவு உண்டு. உலகில் ஒரு
<br/>மனிதன் இன்பத்தை அடைவதற்கு மதமோ, தத்துவமோ ஒருக்காலும் உதவாது. துக்கத்திலிருந்து தப்பிக்க வழி இல்லையாயின், பின் மதம்
<br/>என்ன செய்ய முடியும்? பிறப்பிலேயே துக்கம் எப்போதும் இருக்கும் என்றால் அத்தகைய துக்கத்தினின்று மனிதன் விடுபட புத்தர் என்ன
<br/>செய்ய முடியும்? பவுத்தரல்லாதார் பவுத்த போதனைகளை ஏற்றுக் கொள்வதில் மிகப் பெரும் தடையாய் இந்த நான்கு ஆரிய
<br/>உண்மைகள் திகழ்கின்றன. ஏனெனில் நான்கு ஆரிய உண்மைகள் மனிதனின் நம்பிக்கையைத் தகர்ப்பனவாய் உள்ளன. இந்த நான்கு
<br/>ஆரிய உண்மைகளும், புத்தரின் போதனைகளின் பகுதிகளா? அல்லது பிற்காலத்தில் துறவிகளால் உண்டாக்கி சேர்க்கப்
<br/>பட்டவைகளா?
<br/>
<br/>மூன்றாவது பிரச்சினை ஆன்மா, கர்மம், மறுபிறப்பு ஆகியவை பற்றிய போதனைகளோடு தொடர்புடையதாகும். புத்தர் ஆன்மாவின்
<br/>இருப்பை மறுத்தார். ஆனால் அவர் கர்மம் மற்றும் மறுபிறப்பு உண்டு என உறுதிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. உடனே ஒரு கேள்வி
<br/>எழுகிறது. ஆன்மா இல்லையென்றால், கர்மம் எப்படி இருக்க முடியும்? இவை திணறடிக்கும் வினாக்கள். கர்மம், மறுபிறப்பு ஆகிய
<br/>சொற்களை புத்தர் எந்தப் பொருளில் பயன்படுத்தினார்? அவர் காலத்தில் பிராமணர்கள் எந்தப் பொருளில் அவற்றைப் பயன்
<br/>படுத்தினார்களோ அதற்கு மாறான பொருளில் அவற்றைப் பயன்படுத்தினாரா? அப்படியாயின் என்ன பொருளில்? பிராமணர்கள்
<br/>பயன்படுத்திய அதே பொருளில் அவற்றை பயன்படுத்தினாரா? அப்படியாயின் ஆன்மாவை மறுப்பதற்கும், கர்மம், மறுபிறப்பை
<br/>உறுதிப்படுத்துவதற்கும் இடையில் மிக அதிகமான முரண்பாடு இல்லையா? இந்த முரண்பாடு தீர்க்கப்பட வேண்டியது அவசியம்.
<br/>
<br/>நான்காவது பிரச்சினை பிக்குவோடு தொடர்புடையதாகும். பிக்குவை புத்தர் உருவாக்கியதன் நோக்கம் யாது? முழுநிறைவான
<br/>மனிதனை உருவாக்குவது நோக்கமா? அல்லது தன் வாழ்க்கையை மக்களுக்குத் தொண்டாற்றுவதில் அர்ப்பணித்து, அவர்களின்
<br/>நண்பராய், வழிகாட்டியாய், தத்துவவாதியாய் திகழும் ஒரு சமூக சேவகரை உருவாக்குவது அவர் நோக்கமா? இது ஒரு மிக முக்கிய
<br/>வினாவாகும். பவுத்தத்தின் எதிர்காலமே இவ்வினாவைப் பொறுத் துள்ளது. ஒரு பிக்கு தன் வரையில் முழுநிறைவான மனிதராக மட்டும்
<br/>இருந்து விடுவாரேயானால், பவுத்தத்தைப் பரப்புவதற்கு அவர் எவ்வகையிலும் பயன்படமாட்டார். ஏனெனில், அவர் முழுநிறைவான
<br/>மனிதராயினும் தன்னலமான மனிதர் ஆவார். இதற்கு மாறாக, அவர் சமூக சேவகராக இருப்பாராயின், பவுத்தத்தின் நம்பிக்கைக்குரியவர்
<br/>என்பது நிரூபணமாகும். இந்தவினாக்களுக்கான தீர்வு காண்பதில் பவுத்த போதனையின் முரணற்ற தன்மையை சார்ந்திடுவதை விட
<br/>பவுத்தத்தின் எதிர்காலத்தைப் பொறுத்திடுவதே சரியாகும்.
<br/>
<br/>என் வினாக்கள் வாசகர்களை விழிப்புறச் செய்து இப்பிரச்சினை
<br/>களுக்கான தீர்வுகளுக்கு அவர்களது பங்களிப்பை செய்யத் தூண்டும்
<br/>என்று நான் நம்புகிறேன். </br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866