பாரதி காட்டிய பாதை
ஆசிரியர்:
எஸ்.கமலா கந்தசாமி
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88?id=1011-3652-7912-6850
{1011-3652-7912-6850 [{புத்தகம் பற்றி பாட்டுக்கொரு புலவன் என்று ஏட்டுலகம் போற்றுகின்ற எட்டயபுரத்தின் எழுச்சிக் கவிஞன். தமிழ் ஞாயிறு - பாரதி நம் வாழ்விற்கு வழிகாட்டிய நீதிக் கருத்துக்களைத் தொகுத்துச் சொல்கின்ற ஒரு கட்டுரைத் தொகுதியே இந்நூல். பாரதி காட்டிய பாதை தெளிவானது, நேர்மையானது. காலத்திற்கேற்ற புதுமையானதும் கூட. பக்தி - தேசீயம் - பெண்விடுதலை - சமுதாயம் - மனித நேயம், உலக நேயம் எனப் பல செய்திகள் பாடு பொருளாக இருக்கின்றன. யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிய மொழி இல்லை என்று தமிழைப் புகழ்ந்தான் பாரதி. 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே', என்று தமிழ் மண்ணைப் பூஜித்தான். கம்பனைப் போல் வள்ளுவன் போல்-இளங்கோ போல் பூமிதனில் புலவன் இல்லை என்று புகழ் உரைத்தான். தமிழன் எனும் நிலை தாண்டி இந்தியன் எனும் உணர்வில் பாரதநாடு பழம்பெரும் நாடு - நீரதன் புதல்வர் - இந்நினைவகற்றாதீர் என்று எச்சரிக்கைத் தருகிறவனும் பாரதியே.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866