பாட்டிகளின் சிநேகிதன்
ஆசிரியர்:
நா.விச்வநாதன்
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D?id=1701-5709-3823-8136
{1701-5709-3823-8136 [{புத்தகம் பற்றி பாட்டிகளின் சிநேகிதனாக இருந்து கதைகள் கேட்டு, கவிதை நயத்தோடு கதை சொல்கிறார் நா. விச்வநாதன். விச்வநாதன் வித்தியாசமான படைப்பாளர்தான். இயல்புத் தன்மைகளை இழையோட விட்டுச் சிறுகதைகளை நெய்திருக்கிறார். அவர் நட்டுவைத்த சிறுகதைப் பூச்செடிகள் இலக்கியச் சோலையில் மணம் வீசுகின்றன.
<br/>வாழ்க்கையை அதனதன் அழுக்குகளோடும் அதனதன் அழகுகளோடும் மேன்மைகளோடும் கயமைகளோடும் அருகிருந்து பார்ப்பது அவசியமாகிறது என்ற இலக்கணம் வகுத்துக்கொண்டு கதை படைக்கிறார்.
<br/>* பாட்டு சொல்லித்தர வந்த வாலிபனை “அவன் நம்ம குழந்தை மாதிரி - குழந்தைதான். . . நம்ம குழந்தைதாங்க அவன்" என்று இரண்டாம் தார இளம் மனைவியின் ஆழ்மனம் சொல்வதைக் கேட்டுச் சந்தேக மேகத்தில் மறைந்திருந்த முதிய கணவன் மழையாகிப் போனதுதான் 'யோகம்'.
<br/>* உயிருக்குப் போராடும் நோயாளியை மருத்துவமனையில் சேர்ப்பதைவிடக் கோவில்விழா முக்கியமானதல்ல என்பதை உணர்த்திட, பூஜை நடந்துகொண்டிருக்கும்போது கூட்டத்தைக் கலைத்து, கோவில் பந்தல் வழியாக வண்டியை வேகமாக ஓட்டி மக்களை 'இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு' கொண்டு வருகிறார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866