பஞ்சகவ்யா
ஆசிரியர்:
ஜி.பழனிச்சாமி
விலை ரூ.155
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE?id=1458-7055-2059-3411
{1458-7055-2059-3411 [{புத்தகம் பற்றி இயற்கையை வணங்கி, இயற்கையோடு இணைந்து, இயற்கையை விட்டு அகலாமல் வாழ்ந்த நம் முன்னோர்கள் விவசாயத்தைப் போலவே தங்கள் வாழ்விலும் செழித்திருந்தனர். <br/>ஆனால் காலமாற்றத்தால் இயற்கையை விட்டு விலகிச் சென்று, நகரமயமாதல் பிடியில் சிக்கியதால் விவசாயம் செய்வது குறைந்துபோனது. விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறிப்போயின, மாறிக்கொண்டும் வருகின்றன. <br/>`இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் உள்ளிட்டவர்கள் ஏற்படுத்திய விழிப்புஉணர்வின் பயனாக, பெரும்பாலான விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, விளைச்சலைப் பெருக்கும் இயற்கை விவசாய முறைக்கு ஈடு இணையற்ற உரமாக விளங்கும் பஞ்சகவ்யம் கண்டறியப்பட்டது.<br/>பஞ்சகவ்யம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் திரவமாகவும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றலை அளிக்கும் காரணியாகவும் விளங்குகிறது. நுண்ணூட்டச் சத்துக்களும் நுண்ணுயிர் சத்துக்களும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளும் மிகுந்த அளவில் உள்ள, நல்ல உயிர் உரம் பஞ்சகவ்யா. <br/>நோய் விரட்டி மற்றும் பக்க விளைவில்லாத உரமான பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி பெருமளவில் பயன் அடைந்த விவசாயிகளின் அனுபவங்களை, பசுமை விகடன் தொடராக வெளியிட்டது. அந்தத் தொடரின் தொகுப்பு நூல் இது.<br/>மிக மிக எளிய முறையில், சொற்ப செலவில் தயாரிக்கப்படும் பஞ்சகவ்யா, விளைச்சலைப் பெருக்கி விவசாயிகளுக்கு பெரும் லாபம் கொடுக்கிறது. இந்த நூல் பஞ்சகவ்யா பயன்படுத்துவதை இன்னும் பரவலாக்கி, விளை நிலங்களை பசுமையாக்கிட உதவும்.} { அணிந்துரை 'நஞ்சுண்ண வேண்டாவே அகப்பேய் நாயகன் தாள்பெறவே' என்று அகப்பேய் சித்தர் பாடியுள்ளார். சிவனடியை அடைந்து முக்தி பெறவேண்டுமானாலும் அதற்காக கஞ்சா போன்ற போதை நஞ்சுகளை உண்ண வேண்டாம் என்கிறார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866