பசுமை மார்க்சியமும் தமிழ்த் தேசியமும்

ஆசிரியர்: கி.வெங்கட்ராமன்

Category தமிழ்த் தேசியம்
Publication பன்மைவெளி வெளியீட்டகம்
FormatPaperback
Pages 96
Weight150 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே தமிழர் அறம். எல்லா மனிதர்களும் சமம் என்பதை உள்ளடக்கிய, எல்லா உயிர்களுக்கும் சமவாய்ப்பளிக்கிற ! உயிர்மநேயக் கோட்பாடு இது.- "சுதந்திர உற்பத்தியாளர்கள் இணைந்த சமூகம்" என்று மார்க்சு - ஏங்கல்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை விழைவதும், பரிமாற்ற மதிப்பைவிட பயன்மதிப்பு முதன்மை பெற வேண்டும் என்று திணைம நிகரமை. யாளர்கள் விரும்புவதும், கிராம ராஜ்ஜியம் - போட்டிகள் சாராத - கூட்டுறவு சார்ந்த - பொருளியல் என காந்தியம் விரும்புவதும், இயற்கையை அழிக்காத வளங்குன்றா வளர்ச்சிமுறை என்று சூழலியலாளர்கள் முயல்வதும் மேற்சொன்ன தமிழரின் 'அறம்' என்ற மெய்யியலுக்கு (Philosophy) இசைவானது.உயிர்மநேய - சமத்துவ மெய்யியலான அறத்தின் அடித் தளத்தில் இருந்து கொண்டு மார்க்சியம் உள்ளிட்டு வரலாறு நெடுகிலும் வளர்ந்த சமத்துவக் கோட்பாடுகளை உள்வாங்கி மண்ணுக்கு ஏற்ப மலர்ந்துள்ள கருத்தியலே (Ideology) தமிழ்த் தேசியம் ஆகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி.வெங்கட்ராமன் :

தமிழ்த் தேசியம் :

பன்மைவெளி வெளியீட்டகம் :