நகரும் நாவல் மரமும் தவளை நண்பனும்

ஆசிரியர்: வா.மு. கோமு

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 48
Weight100 grams
₹35.00 ₹33.95    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் கோமகன் ஈரோடு மாவட்டத்தில் வாய்ப்பாடி என்கிற குக்கிராமத்தில் 1969ல் பிறந்தவர். பேசப்பட்ட பல நாவல்களையும் சிறுகதை தொகுப்புகளையும் முன்னதாக வெளியிட்டவர். குழந்தைகள் இலக்கியத்தில் சென்ற ஆண்டு 'டுர்ரா என்கிற குறுநாவல் மூலமாக காலடி 'வைத்தவர். தொடர்ந்து சிறார்களுக்காக 'படைப்புகள் எழுதும் ஆர்வத்தில் இருக்கிறார்.பெருவனத்தில் நகர்ந்து கொண்டே இருக்கும் நாவல்மரம் செய்யும்வேடிக்கைகளால் பாதிக்கப்படும் 'வனவிலங்குகள் தங்களை காப்பாற்ற ஒருவன் வனத்திற்குள் வந்தே தீருவான் என நம்புகின்றன, நாவல் பழத்தை சாப்பிட்டதால் தவளை மனிதனானமுகுந்தனுக்கு உதவிட ராகுல் வருகிறான். ராகுல் நாவல் மரத்தை என்ன செய்தான் முகுந்தன் தன் சுய உருவத்தை அடைந்தானா போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக விடை சொல்கிறது இந்தக் கதை. தவளையாக மாறியும் தன் மனதை தளர விடாத முகுந்தனை நீங்கள் இக்கதை வழியே படித்துணரலாம்.


உங்கள் கருத்துக்களை பகிர :
வா.மு. கோமு :

சிறுவர் நூல்கள் :

பாரதி புத்தகாலயம் :