தவளை இசைக்கும் பாடல்

ஆசிரியர்: ஓவியக் கவிஞர் ஆ.உமாபதி

Category கவிதைகள்
Publication அகநி வெளியீடு
FormatPaperback
Pages 64
ISBN978-93-82810-52-0
Weight100 grams
₹50.00       Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



காட்சியின் அடிப்படை புரிதலில் தொடங்கி, கூர்ந்த அவதானிப்பை வாசகனுக்குத் தருவதே ஹைக்கூவின் சிறப்பம்சம். மேலும், சமூகம், இயற்கை, நேயம், பூமியிலுள்ள சிற்றுயிர்களையும் சித்தரித்துப் பாடும் வகையில் இன்று இலக்கண எல்லைகளையும் உள்வாங்கி, தமிழில் துளிப்பா, அணிப்பா, சிந்தர், குறள் வெண்பா, நாலடியார், ஆத்திச்சூடி போன்ற வடிவிலான குறுங்கவிதைகள் தமிழில் அதிகமாக காணக் கிடைக்கும் இக்காலத்தை, கவிதைகளின் பொக்கிஷமான காலமாகக் கருதுகின்றேன். என்றும் என்னோடும் என் சுவாசத்தோடும் ஒட்டியேயிருக்கும் எம் மண்ணின் நிலக்காட்சியை ஹைக்கூவாக்கி பார்ப்பதில் கிடைக்கும் பேரானந்தம் எல்லையற்றது. அந்த வகையில் என்னை ஹைக்கூவில் முழுதாக ஐக்கியப்படுத்திக்கொண்டு, நான் எழுதிய கவிதைகளை, 'மாட்டுக்கொம்பில் தேசியக் கொடி' எனும் ஹைக்கூ நூலாக முதலில் தந்தேன். அதனைத் தொடர்ந்து மீண்டும் என் மண்ணோடும், மக்களோடும், என் நிலத்தில் உயிர்த்திருக்கும் அனைத்து ஜீவராசிகளோடும் நான் கொண்ட நெருக்கத்தின் அன்பில் விளைந்த ஹைக்கூ கவிதைகளை, 'தவளை இசைக்கும் பாடல்' எனும் இரண்டாவது நூலாகத் தந்துள்ளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓவியக் கவிஞர் ஆ.உமாபதி :

கவிதைகள் :

அகநி வெளியீடு :