தமிழகம் ஊரும் பேரும்
ஆசிரியர்:
ரா.பி.சேதுப்பிள்ளை
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1012-3954-4519-9837
{1012-3954-4519-9837 [{புத்தகம் பற்றி தண்டமிழ் வழங்கும் தண்ணார் தமிழ்நாட்டின் சிறப்புகளுள் ஒன்று அதன்கண் அமைந்துள்ள ஊர்களும் அவற்றின் பெயர் களும் ஆம். தமிழகம் - ஊரும் பேரும் எனும் இந்நூல் வரலாற்றுச் சார்புடைய நூல். இவ்வரலாறு தமிழ்நாட்டின் ஊர்களையும் அவற்றின் பெயர்களையும் விளக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு இஃது பெருந்துணை புரியும்.
<br/>ஊரும் பேரும் என்னும் தலைப்பு ஆழமும் அகலமும் அருமையும் பெருமையும் உடையது. "ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ? என்பது திருவாசகம். அப்படி ஊரும் பேரும் இல்லாத இறைவன் கூட ஊர்ப்பெயரால் அழைக்கப்படுகிறான் என்பதை நன்கறிவோம். ஆக ஊரின் பெருமை அத்துணைச் சிறப்புடையது என அறிகிறோம். இன்றைய சூழலில் தான் இன்ன ஊரைச் சார்ந்தவர் என்று சொல்லும் போது அதன் பெருமையைத் தெரிந்து கொள்ளாவிட்டால் அவர் அந்த ஊரைச் சார்ந்தவர் என்பது பொருளற்ற பொய்மொழி ஆகிவிடும். ஆகவே தனது ஊரின் சிறப்பை அறிந்து போற்றுதல் சிறப்புடையது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866