ஞானம் பிறந்த கதை(அர்த்தமுள்ள இந்துமதம்-பாகம் 5)

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category ஆன்மிகம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaperback
Pages 80
ISBN978-81-8402-001-4
Weight100 grams
₹18.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பட்டினத்தார் சொல்கிறார்,
'பக்த கோடிகளே!' என்று ஆரம்பித்தார் பட்டினத்தார். 'என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை உங்களுக்கு விவரிப்பது, என் கடமை என்று கருதுகிறேன். என்னைப் பார்க்கின்ற உங்களில் பலருக்கு, துறவறம் பெருமைக்குரியது என்று தோன்றும். இளமையிலே துறவு பூணலாமா என்ற எண்ணமும் சிலருக்கு எழலாம். இல்லறம், துறவறம் இரண்டையும் தெளிவாக விவரிப்பது, என் முதல் கடமை. வாழ்க்கையின் சகல அனுபவங்களையும் பெற்ற பிற்பாடு துறவியாகும் ஒருவன், இல்லறத்தின் கஷ்ட நஷ்டங்களைத் தெளிவாகப் பிறருக்கு எடுத்துணர்த்த முடியும்.புது வாழ்வில் புகுகின்ற மனிதனுக்கு அது பெரும் உதவி புரியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

ஆன்மிகம் :

கண்ணதாசன் பதிப்பகம் :