குறள் இனிது
ஆசிரியர்:
சோம வீரப்பன்
விலை ரூ.225
https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81?id=1166-1846-8786-4806
{1166-1846-8786-4806 [{புத்தகம் பற்றி தமிழின் பெருமைமிகு அறநூலான திருக்குறள் காட்டும் வழியை பலரும் பலவிதங்களில் எழுதினாலும், அதில் பொதிந்துள்ள மேலாண்மை தத்துவத்தை அகழ்ந்தெடுக்க முனைந்துள்ளார் சோம வீரப்பன். ஈரடி குறளின் சாரத்தை பழச்சாறுபோல பிழிந்து தருவது சாதாரணமான பணியல்ல. ஆனால் அதை திறம்படச் செய்துள்ளார். அவருக்கே உரிய பகடியான நடை, கனமான விஷயங்களையும் எளிதாக்கித் தந்துள்ளது. அந்த முயற்சியில் பெற்ற வெற்றிதான் இந்தப் புத்தகம்.
<br/> வாசகர்களின் தலைமைப் பண்பையும், ஆளுமையையும் வளர்க்க குறள் காட்டும் வழிகளைத் திரட்டி, வாரா வாரம் வணிகவீதியில் விருந்தாக்கினார். ஒவ்வொரு குறளின் சாரமும் ஒவ்வொரு விதமான சாளரத்தை உங்களுக்குள் திறப்பதை உணர்வீர்கள். இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் குறளை நீங்கள் மீண்டும் தேடிப்படிக்கும் முயற்சியிலும் உடனடியாக இறங்குவீர்கள்.அந்த வகையில், உங்களுக்குள் ஒரு புதிய கனலைத் தூண்டிவிட ‘தமிழ் திசை'யின் இந்த வெளியீடு உதவினால், அது எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி.
<br/> வாருங்கள்... தமிழால் இணைவோம்... அறிவாலும் உழைப்பாலும் உயர்வோம்!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866