கி.ராஜநாராயணன் கதைகள் முழுத்தொகுப்பு

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category சிறுகதைகள்
Publication அன்னம் - அகரம்
FormatHardbound
Pages 576
Weight0.97 kgs
₹550.00 ₹522.50    You Save ₹27
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கினேன்; ஒதுங்கியவன் பள்ளிக் கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக்கொண்டிருந்து விட்டேன். எனது ஊரையும் என் மக்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின்மேல்தான். நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து அழுத்தும் இந்த ப மண்ணின் மடியில்தான். இந்தப் புழுதியை நான் தலையில் வாரி, வாரிப் போட்டுக் கொண்டும், என் கூட்டாளிகளின் தலையில் வாரி இறைத்தும் ஆனந்தப்பட்டிருக்கிறேன். இந்த கரிசல் மண்ணை நான் ருசித்துத் தின்றதற்கு என் பெற்றோரிடம் எத்தனையோ முறை அடிவாங்கியிருக்கிறேன். இன்றைக்கும் எனக்குத் தெவிட்டவில்லை .

உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

சிறுகதைகள் :

அன்னம் - அகரம் :