கதை மலர் பகுதி 3

ஆசிரியர்: பதிப்பக குழு

Category சிறுவர் நூல்கள்
Publication ராமகிருஷ்ண மடம்
FormatPaper back
Pages 33
ISBN81-7120-130-X
Weight100 grams
₹50.00 ₹48.50    You Save ₹1
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சிவலோகத்தில் ஒரு நாள்......
விநாயகப் பெருமானே! படைப்புக் கடவுளான பிரம்மதேவன் தலைமையில் தேவேந்திரனும் முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்திருக்கிறார்கள். தங்களை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்கிறார்கள். சரி வரச் சொல். அனைவரும் உள்ளே வந்து விநாயகரைத் தொழுதுவிட்டு. பிரபோ, அனலாசுரன் என்ற அசுரன் எல்லோரையும் துன்புறுத்துகிறான். அவனது தொந்திரவு தாங்க முடியவில்லை. அவன் தன் வாயிலிருந்து நெருப்பைக் கக்குகிறான். அவன் அருகிலேயே போக முடியவில்லை. யார் அருகில் நெருங்க முயன்றாலும் அவர்களை அவன் நெருப்பைக் கக்கியே பொசுக்கிவிடுகிறான். யானைமுகப் பெருமானே! உலகத்தைத் துன்புறுத்தி வந்த பல அரக்கர்களைத் தாங்கள் கொன்று ஒழித்திருக்கிறீர்கள். இந்த அனலாசுரனையும் தாங்கள்தாம் அழித்து எங்களைக் காப்பாற்ற வேண்டும். சரி, அப்படியே செய்கிறேன். இப்போதே அவனை அழிக்கப் புறப்படுகிறேன். இனி நீங்கள் அந்த அனலாசுரனைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

உங்கள் கருத்துக்களை பகிர :
பதிப்பக குழு :

சிறுவர் நூல்கள் :

ராமகிருஷ்ண மடம் :