ஒரு சிறு புள்ளின் இறகு

ஆசிரியர்: மணற்காடர்

Category கவிதைகள்
Publication ஓவியா பதிப்பகம்
FormatPaper Back
Pages 112
ISBN978-81-943467-5-3
Weight200 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஒரு சங்கப் புலவனின் பெயர்போல் ஒலிக்கும் புனைபெயரில் இலங்கை பருத்தித்துறையின் கீழைப் புலோலி கிராமத்தில் பிறந்து, கனடாவுக்குப் புலம் பெயர்ந்து சென்று, அந்நாட்டு சட்டத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்று. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கனடாவில் வாழ்ந்து வரும் ராஜாஜி ராஜகோபாலன் எப்படி மணற்காடர் எனும் கவிஞராக உருத்திரிபு அடைகிறார்? 2014இல் “ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்” கவிதைத் தொகுதியையும், 2015 இல் “குதிரை இல்லாத ராஜகுமாரன்" சிறுகதைத் தொகுதியையும் முன்வைத்த இவரது இன்றைய கவிதைகள் என்ன செய்கின்றன?
“பொட்டல்காடாக இருந்தால் என்ன
சொந்தமென்று சொல்ல
புழுதியாவது இருக்கிறதே”. எனும் வலியுணர்த்தும் வார்த்தைகளில் தெரிந்து விடுகிறது ராஜாஜி ராஜகோபாலன் ஏன் மணற்காடர் எனும் கவிஞராக மாறினார் எனும் புதிருக்கானவிடை. மணற்காடர் எனும் மூத்த எழுத்தாளரின் இக்கவிதைகள் எந்தவித ஆடம்பரமும் இன்றி எளிமையாகப் பூத்து நுட்பமான கவித்துவ நறுமணத்தைக் காற்றில் விதைக்கும் காட்டுப் பூக்களைப் போல வாசகனை ஆச்சரியப்படுத்துகின்றன.
கவிஞர் இந்திரன்

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

ஓவியா பதிப்பகம் :