எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் மூன்றாம் தொகுதி
ஆசிரியர்:
எஸ். ராமகிருஷ்ணன்
விலை ரூ.510
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF?id=1084-4459-2033-7670
{1084-4459-2033-7670 [{புத்தகம் பற்றி கதை என்றால் என்ன, கேள்வி மிக எளிமையாகயிருக்கிறது. ஆனால் இதற்கான முடிவான பதிலாக எதுவுமில்லை. ஒவ்வொரு தேசமும் கதை பற்றி ஒருவித எண்ணத்தைக் கொண்டிருக்கின்றன. கதை என்பது கற்பனையும் அனுபவமும் ஒன்று கலந்து உருவாக்கப்படும் புனைவு என்பதை எல்லாக் கதைமரபுகளும் ஒத்துக்கொள்கின்றன.
<br/>கதை சொல்பவன் யார், யாருடைய கதையை யாருக்குச் சொல்கிறான், எப்படிச் சொல்கிறான், எதைக் கவனப்படுத்துகிறான் என்பதில் தனித்துவமான பாணியைக் கொண்டிருக்கிறார்கள் வெற்றிகரமான சிறுகதையாசிரியர்கள். அதனால்தான் ஒரு சிறுகதையை வாசிக்கத் துவங்கியதும் இது புதுமைபித்தன் பாணி, இது மௌனியின் பாணி, இது தஸ்தாயெவ்ஸ்கியின் பாணி என நம்மால் எளிதாக அடையாளம் கண்டுவிட முடிகிறது.
<br/>இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற இலக்கணமெல்லாம் சிறுகதைக்கு இல்லை. வாழ்வனுபவங்களும் கற்பனையும் வேறுவேறு வகைகளில் ஒன்று கலந்தே சிறுகதைகள் உருவாகின்றன.
<br/>கவிஞர்கள் சொற்களைக் கவனமாகத் தேர்வு செய்வது போலவே சிறுகதையாசிரியன் வாக்கியங்களைக் கவனமாக உருவாக்குகிறான். சரியான ஒரு துவக்க வாக்கியம் அமையப்பெற்றால் போதும், கதை தானே ஈர்ப்பு கொள்ளத் துவங்கிவிடும்.
<br/>இன்றைய சிறுகதைகள் நவீன காலகட்டத்தைத் தாண்டியவை. பல்வேறுபட்ட கதைக்களங்கள், கதையாடல்கள், குறியீடுகள், கற்பனை கள் யாவும் ஒன்று சேர்ந்தவை. இந்தப் பன்முகத்தன்மையே இன்று சிறுகதை எழுதுவதை ஒரு சவாலாக்கியுள்ளது.
<br/>நம்மால் அறியப்படாத கதைவெளி இன்னும் நிறையவே இருக்கிறது. தொடப்படாத அந்தக் கதைவெளியை அடையாளம் காண்பதும் அவற்றிலிருந்து புதிய புனைவை மேற்கொள்வதையுமே எனது பிரதான எழுத்துப்பணியாகக் கருதுகிறேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866