இன்னொரு தேசிய கீதம்
ஆசிரியர்:
வைரமுத்து
விலை ரூ.100
https://marinabooks.com/detailed/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?id=1229-8725-1633-0707
{1229-8725-1633-0707 [{புத்தகம்பற்றி நல்ல கவிதைகளை வாசிக்கவும் நேசிக்கவும் ஒரு தலைமுறை இளைஞர்களுக்குக் கற்றுக்கொடுத்தவர் வைரமுத்து, கவிதைகள் நமக்கானவை அல்ல என்னும் சாமானியர் களின் தயக்கத்தை வைரமுத்துவின் புதுக்கவிதைகள் முறித்துப் போட்டன. புரிகிறது; உணர்வுடன் கலக்கிறது; மயக்குகிறது; மிரட்டுகிறது; கெஞ்சுகிறது; கொஞ்சுகிறது இவர் கவிதை, கரும்பைப் போல் காதலைப் போல் கவிதையும் இனிக்கிறது. எனில், என்னாலும் கவிதை எழுத முடியுமே என்ற நம்பிக்கையை இன்னொரு தலை முறை இளைஞர்களுக்கு வழங்க இதோ புறப்பட்டிருக் கிறது வைரமுத்துவின் இன்னொரு தேசிய கீதம்.
<br/>} {புத்தகம் பற்றி எந்த ஒரு உயிருக்கும், பொருளுக்கும் 'கரு' ஒரு பிரதானமாக அமைகிறது.
<br/>இந்தக் கருவைக் கொண்டுதான் கதைகளும் கவிதைகளும், காவியங்களும் உரு கொள்கின்றன.
<br/>மறுதலிக்கப்பட்ட மானுட வாழ்க்கையின் சாரம்தான், என் எழுதுகோல் மகனின் உயிர் “மை”யின் சமனம் புத்தகப் பெண்ணின் தாள் வயிற்றில் கருவாகிறது.
<br/>கடலை கடக்கும் பறவைகள் கரையை அடையும் முயற்சியின் - வேதனையின் விளிம்பில் அவை அடையும் உடலின் ரணத்தையும், உள்ளத்து உருக்கத்தையும் பதிவு செய்யவே என் எழுதுகோல் பாய்மரமாகிறது.
<br/>வெயிலில், சுடும் மணலில் இந்த மண் புழுக்கள் படும் வேதனையைதான் விவரிக்கிறேன்.
<br/>கானங்கள் பாடும் கவிதைகளை விட கவலைகள் கூறும் கவிதைகளை நான் நேசிக்கிறேன்.
<br/>உங்கள், விழி வழி என் எண்ண த்தையும், ஏக்கக் கனவுகளையும் இறக்கி வைக்கிறேன்.
<br/>சுமை சுமக்கும் தோள்களின் சோர்வுக்கும்; கதிர் அறுக்கும் கரங்களின் ரணங்களுக்கும் சில ஒப்பாரிக் கவிதைகள் ஒத்தடம் இடுமா? நம்பிக்கையில் நான்.
<br/>-த. அருள் நாதன்
<br/>} { }]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866