ஆன்மீகச் சிந்தனைகள்-3

ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன்

Category ஆன்மிகம்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 128
Weight200 grams
₹100.00 ₹97.00    You Save ₹3
(3% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பண்டரிபுரத்தில் வாழும் நாமதேவர் பாண்டுரங்க ஜபத்திலேயே மனம் ஊறிக் கிடந்தவர். உண்பதற்கு உணவும், உடுத்துவதற்கு உடையும், இருப்பதற்கு இடமும் அவருக்கு பாண்டுரங்கன் அருளால் எவர் மூலமாவது கிடைத்தன. உழைப்பு என்பது பாண்டுரங்க ஜபம்தான். யார் வீட்டிலாவது பிறந்த நாள், திருமண நாள், சீமந்தம், காதுகுத்து, அறுபத்துக்கு அறுபது என்று வந்தால் அவருடைய நிகழ்ச்சி நிச்சயம் இருக்கும். இந்துஸ்தானி சங்கீதம் ஒரு வேளையும், மந்திர ஜபங்கள் ஒரு வேளையும், விருந்தினர்களுடைய திருமணப் பாடல்கள் சில பொழுதும், நாமதேவரின் பஜனை பாடல்கள் நெஞ்சுருக்கும் வண்ணம் பலரால் பாடப்படுவதும் அந்த விழாக்களில் நடக்கும். நல்ல உணவும், கட்டுசோறும், அடுத்த வாரத்திற்கு தானியமும், கொஞ்சம் பணமும், வேட்டியும், மேல்துண்டும் கொடுப்பார்கள். இன்னும் அள்ளி அள்ளி கொடுக்கலாம். ஆனால் போதும் போதும் என்று நாமதேவர் அவைகளோடே திரும்பி விடுவார். ஆனால் ஒரு குடித்தனத்திற்கு இதெல்லாம் எம்மாத்திரம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
இந்திரா சௌந்தர்ராஜன் :

ஆன்மிகம் :

விசா பப்ளிகேசன்ஸ் :