அறிஞர் அண்ணாவின் - சொற்பொழிவுகள்
ஆசிரியர்:
அறிஞர் அண்ணா
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1664-8726-5674-3205
{1664-8726-5674-3205 [{புத்தகம் பற்றி உலக உத்தமர் மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம் ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக்கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகி விட்டது; இழி குணத்தான் மாநிலம் போற்றும் மகாத்மாவைக் கொலை செய்தது முதல் உலகம் இன்றும் அழுது கொண்டுதான் இருக்கிறது. அவருடைய மாண்புகளைப் பற்றிப் பேசாத நாடில்லை; எழுதாத ஏடில்லை. எங்கும் கலக்கம் - ஏக்கம் - எவருக்கும் தாங்கொணாத் துக்கம். அதை மாற்ற அவரைப் பற்றிப் பேச முனைகிறோம். ஒவ்வொரு பேச்சும் மீண்டும் மீண்டும், கண்ணீரைக் கொண்டு வரவே உதவுகிறது. மூண்ட தீ அணையவில்லை . துக்கம் தரும் நிலை அது. ஆனால் அவர் புகழ் ஒளி பரவுகிறது. அதை எண்ணுவோம், ஆறுதல் பெற முயற்சிப்போம்:
<br/>நாம் அரசுரிமை இழந்திருந்தபோது அவர் பிறந்தார். அவர் மறையும்போது நாம் அரசுரிமை பெற்று வாழ்கிறோம்.
<br/>அவர் பிறந்தபோது நமது நாடு உலகிலே இழிவும், பழியும் தாங்கி நாடாக இருந்தது அவர் மறைந்திடுவதற்கு முன்னம் மாஸ்கோவிலிருந்து நியூயார்க் வரையிலே உள்ள சகல நாடுகளிலும், நமக்கு விடுதலையை விளக்கும் விருது பெற்று, தூதுவர்களும் வீற்றிருக்கும் நிலை உண்டாகி விட்டது.
<br/>அவர் பிறந்தபோது உலக மன்றத்திலே, நமக்கு இடம் கிடையாது. இன்று நாம் இருந்தால், உலக மன்றத்திலே புதியதோர் பலம் என்று பல நாடுகள் எண்ணும் நிலை ஏற்பட்டுவிட்டது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866